தாமிரப்பட்டணம்: தமிழின் முதல் நாவல்
மதீனத்துந் நுஹாஸ்

நாவல்

ஆசிரியர் : மாப்பிள்ளை லெப்பை ஆலிம்

தொகுப்பு : எம்கே.ஈ. மவ்லானா

பக்கங்கள் : 134 / விலை : ₹180

முதல் பதிப்பு : மே 2024

ISBN : 9789391593223

ஃபார்சீ மொழிக் கதையொன்றைத் தழுவி கி.பி. 1858இல் எழுதப்பட்ட ‘மதீனத்துந் நுஹாஸ்’ என்னும் ‘தாமிரப்பட்டணம்’தான் தமிழின் முதல் நாவல். 1899இல் அறபுத்தமிழ் வடிவில் அது அச்சிலேறியது. பிறகு 1979இல் நவீனத் தமிழ் வரிவடிவில் வெளிவந்தது. அதன் பிறகு நாற்பதாண்டுகளாக மறுபதிப்பு காணாமலிருந்த இவ்வரிய நூல் இப்போது மீண்டும் உங்கள் கரங்களில்...